ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் இழப்பு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், பி.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடியிருக்கிறார். இதில் அவர் ரூ.2 லட்சம் வரை பணத்தை இழந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.