கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-10-17 19:30 GMT
பெரம்பலூர்:

11 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனை
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 49 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 75 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 306 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 134 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்