தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-10-18 20:16 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளாழத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் குருநாதன் என்ற ரஜினி (45) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று குருநாதன், சங்கரிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சங்கரை தகாத வார்த்தையால் திட்டி குருநாதன் தாக்கியுள்ளார். இது குறித்து உடையார்பாளையம் போலீசில் சங்கர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்