மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 17 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 413 ஆக உள்ளது.