கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு

ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2021-10-19 19:42 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
தடுப்பூசி முகாம் 
ராஜபாளையம் நகராட்சி சுகாதாரத்துறை, வருவாய் துறையுடன் இணைந்து சம்மந்தபுரம் 8-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் ஆகியோரின் அறிவுரைப்படி மாவட்டத்தில் முதன்முறையாக 100 சதவீத தடுப்பூசி போட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பரிசு 
 ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகர் நல அலுவலர் சரோஜா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரியங்காவு வரவேற்றார். 8-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயசெல்வி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைகர் சம்சுதீன் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். துப்புரவு ஆய்வாளர்கள் பழனிகுருகாளி, சுதாகரன், பிரபாகரன், பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்