போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பேட்டை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-19 21:01 GMT
பேட்டை:
பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் சுடலை (வயது 28). டிரைவர். இவர் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுடலையை கைது செய்தார். சிறுமியை போலீசார் மீட்டு சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்