மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-10-20 17:23 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அழகம்மாள் (வயது72). இவர் ராமநாதபுரம் வந்து அரண்மனை பகுதியில் காய்கறி வாங்கிவிட்டு திரும்பி ஊர் செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தனது தங்கை மகளுக்கு நகை எடுக்க வேண்டும் நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக உள்ளது என்று கூறி அதனை கழற்றி தருமாறும் பார்த்துவிட்டு தருவதாக கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி மதிமயங்கிய அழகம்மாள் 2¼ பவுன் தங்க சங்கிலி நகையை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பார்ப்பதுபோல் நடித்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விசாரித்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அழகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்