வாகனம் மோதி அரசு ஊழியர் பலி

களியக்காவிளை அருகே வாகனம் மோதியதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-10-20 20:16 GMT
களியக்காவிளை, 
களியக்காவிளை அருகே வாகனம் மோதியதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார். 
அரசு ஊழியர்
தஞ்சாவூர் மாவட்டம் அம்பலபட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). இவர் குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள அரசு வாணிப கழக கிட்டங்கியில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.
 இதற்காக பாலகிருஷணன் திருத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.  
வாகனம் மோதியது
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் டீ குடிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது திருத்துவபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
 இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை  செய்த டாக்டர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
பின்னர், இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்