விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-10-20 20:18 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 55). கூலி தொழிலாளியான இவர் பல வருடங்களாக தொடர்ந்து மது குடித்ததால் ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்றுவலி சரியாகாத காரணத்தால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தனது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் தேவேந்திரனின் மகன் பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்