விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட தலைவர் லியாகத் அலி, செயலாளர் வைரவன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், ஆஸ்பத்திரிகளில் முன் பணம் பெறுவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.