வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Update: 2021-10-21 18:46 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் முடுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் வீட்டு மாடியில் துணி காய வைத்ததை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.  பலத்த காயமடைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மகன் வேல்முருகன் (21) கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்