இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலி

இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலி

Update: 2021-10-22 19:21 GMT
தளவாய்புரம்
தளவாய்புரம் பி.வி.எஸ். தெருவை சேர்ந்த அய்யனார்(வயது 66). இவர் இங்குள்ள கூட்டுறவு மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேவகா(வயது 58) என்ற மனைவியும், அன்பு, கார்த்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் இருசக்கர வாகனத்தில் தளவாய்புரத்திலிருந்து அயன் கொல்லங்கொண்டான் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார். இவர் கொல்லங்கொண்டான் விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சத்தியவாசன்(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்