ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-10-23 18:03 GMT
பொன்மலைப்பட்டி, அக்.24-
திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 27). இவர் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும்போது வழிமறித்து பாலியல் ரீதியாக கிண்டல் செய்துள்ளார். மேலும் செல்போனிலும் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி புருஷோத்தமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த புருஷோத்தமனின் நண்பர்களான ராம் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்