பேராசிரியர் வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை

சிதம்பத்தில் பேராசிரியர் வீட்டில் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-24 16:57 GMT
அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மாரியப்பா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 50). இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். 
ஜெயந்திக்கு உடல்நிலை சரியில்லாததால்  கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் புகழேந்தி சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக  அக்கம்பக்கத்தினர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதறி அடித்து கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

ரூ.2 லட்சம்

 இது குறித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்