முதியவர் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-24 19:52 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்தவர் கெங்கன் (வயது 66). இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்