விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு

நெல்லையில் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.

Update: 2021-10-24 19:56 GMT
நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் முருக குட்டி (வயது 35). இவர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள், மாடு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருக குட்டி பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருக குட்டி நேற்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்