ஆர்ப்பாட்டம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-25 18:33 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 20 சதவீத போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 130 பேர் கலந்து கொண்டனர். இதே போன்று மின் வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய இடங்களில் 20 சதவீத போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்