புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-25 20:30 GMT
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சுஜாதா (வயது 40). இவர் தச்சநல்லூர் சந்தி மறித்தம்மன் கோவில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவர் அங்கு வைத்து புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் சம்பவ இடத்திற்கு சென்று, சுஜாதாவை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்