விபத்தில் விவசாயி பலி

விபத்தில் விவசாயி பலியானார்.

Update: 2021-10-26 16:46 GMT
கமுதி,
கமுதி அருகே இடைச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது42). இவர் மோட்டார் சைக்கிளில் கமுதியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே கிடாத்திருக்கை கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் ஓட்டிவந்த  மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த ரவி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்