முதியவர் தற்கொலை

பாளையங்கோட்டையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-26 19:29 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமிரா சிட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்