மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2021-10-26 20:09 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தம் சாலையில் பேக்கரி கடை நடத்தி வருபவர் குமார். இவர் தனது கடை முன்பு மோட்டார் சைக்கிளை இரவில் நிறுத்தினார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதனை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்