மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-26 20:09 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீசார் கீழக்கவட்டாங்குறிச்சி பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 5 சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டை ஓட்டி வந்த அன்னிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரனின் மகன் விஜயராஜ்(வயது 19) என்பவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்