சிறுமிக்கு பாலியல் தொல்லை; பள்ளி மாணவன் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-26 21:52 GMT
தாரமங்கலம்:
தாரமங்கலம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவன், அருகில் உள்ள காட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்