மோட்டார் சைக்கிள்கள் மோதல்; இளம்பெண் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார்.

Update: 2021-10-27 10:26 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 30), இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கி்ள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த லட்சுமி தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்