பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடைபெற்றது.

Update: 2021-10-27 18:17 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா- 2021 (கலா உத்சவ்) திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

இதில், கல்வி மாவட்ட அளவில் 78 பள்ளிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 
விழாவில் செவ்வியல் நடனம், பாரம்பரிய நடனம், ஓவியம், முப்பரிமாண சிற்பங்கள், காண் கலை, இசைக்கருவி வாசித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் ஜி.குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட கல்வி அலுவலர் (பயிற்சி) சுகப்பிரியா வாழ்த்துரை வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட பொறுப்பாளர் சந்திரசேகரன், வேலாயுதம், சுமித்ரா, ரேவதி உள்பட பலர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்