வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை

ராஜபாளையம் வன பகுதியில் யானை இறந்து கிடந்தது.

Update: 2021-10-31 20:38 GMT
தளவாய்புரம், 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் அணை அருகில் தேவியாறு பீட் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், சொக்கநாதன்புத்தூர் கால்நடை மருத்துவர் தமிழரசன், சேத்தூர் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோப்ப நாய் மற்றும் வெடிபொருள் கண்டுபிடிப்பு கருவி கொண்டு சோதனை மேற்கொண்டனர். யானை உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் குழி தோண்டி யானையை புதைத்தனர்.

மேலும் செய்திகள்