வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கோவில்பட்டியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-03 14:28 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் காமாட்சி ராஜன் (வயது 41). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து பழக்கடை நடத்தி வந்தார். இவருடைய தந்தை ராஜகோபால் பழக்கடையை விற்பனை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காமாட்சி ராஜன் கடந்த 29-ந் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்த அவரை, மனைவி கீதா மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி ராஜன் இறந்தார். இதுபற்றி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் கீதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்