தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
ஆரணியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
ஆரணியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி அரசு மருத்துவமனை அருகே மணியம்மை தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 26), மூட்டை தூக்கும் தொழிலாளி. தந்தை இறந்ததில் இருந்து மதுவுக்கு அடிமையாகி தினமும் வீட்டுக்கு வரும்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வருவதால் தாய் இந்திரா கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்லும்போது சுதாகர் தாய் இந்திராவை தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாலை மது அருந்திவிட்டு வீடு திரும்பிய சுதாகர் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உறவினர் சதீஷ் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.