கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-09 18:38 GMT
கடையம்:

கடையத்தை அடுத்துள்ள மயிலப்புரம் மேல தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் தனலட்சுமி (வயது 23). இவர் கேரளாவில் உள்ள  பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். தனது ஊர் அருகே உள்ள பகுதியில் வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 7-ந் தேதி முதல் தனலட்சுமியை காணவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தனலட்சுமி பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், தனலட்சுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்