மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

Update: 2021-11-09 19:27 GMT
மணப்பாறை, நவ.10-
மணப்பாறை காந்தி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், நம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (வயது 46), அவரது மனைவி தனலெட்சுமி ஆகியோர் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பி ஒன்றை எந்திரம் மூலம் தங்கவேல் அறுக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் விழுந்தார். இதைகண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்