குடியிருப்புக்குள் புகுந்த மான்
சாத்தூர் அருகே குடியிருப்புக்குள் மான் புகுந்தது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே கோபாலபுரம் கிராமத்தில் விளை நிலங்களில் உள்ள மக்காச்சோள தட்டைகளை மேய்ந்த மான் ஒன்று வழி தவறி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் விரட்டி கடித்ததில் மான் காயம் அடைந்தது. இதையடுத்து அந்த மானை மீட்ட அப்பகுதி மக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்தனர்.