நெடுஞ்சாலை அருகே ஆண் பிணம்

நெடுஞ்சாலை அருகே ஆண் பிணம் கிடந்தது.

Update: 2021-11-12 19:52 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபலபுரம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி பொதுமக்கள் பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று, இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்