திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-11-13 16:14 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் பூதேரி நடுத்தெருவை சேர்ந்தவர் காண்டீபன் மகள் வினோதினி(வயது 19). இவர் பூதேரி பகுதியை சேர்ந்த மாறன் என்பவரை காதலித்து கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோதினி தனது கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வினோதினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காண்டீபன், திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு மாறன் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வினோதினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடா்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வினோதினிக்கு திருமணமாகி 9 மாதமே ஆவதால் அவரது சாவு குறித்து திண்டிவனம் சப்-கலெக்டா் அமீத் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்