ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி இறந்தார்.

Update: 2021-11-13 17:13 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகில் ெரயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ெரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர், கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த அழகிரிசாமி மகன் கணேசமூர்த்தி (வயது 28), கட்டிட தொழிலாளி என்பதும், ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.
சின்ன கணேசமூர்த்திக்கு முருகலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்