மது விற்ற 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-13 17:41 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி தென்பாகம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 113 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்