வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது

குளித்தலை அருகே வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-13 19:15 GMT
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி புற்றுக் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை மனதில் வைத்துக்கொண்டு யோகேஷ், அவரது சகோதரர் கோபி மற்றும் உறவினர் யுவராஜ் (வயது22) ஆகிய 3 பேரும் மாரியாயி மகன் ரஞ்சித் (25) என்பவரை தகாத வார்த்தைகளை கூறி கட்டையால் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த ரஞ்சித் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுமேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரஞ்சித்தின் சகோதரர் சூர்யா (29) அளித்த புகாரின் பேரில் யுவராஜ், யோகேஷ், கோபி ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்