நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தை சேர்ந்தவர் அருள் ராஜன். இவருடைய மகள் சுவேதா (வயது 17). பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுவேதாவுக்கு செல்போன் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுவேதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.