முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள தளவாய்புரம் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 70). இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.