மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தனர்.

Update: 2021-11-14 21:18 GMT
சோமரசம்பேட்டை:
சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு தெற்கு தெருவை சேர்ந்தவர் வனிதா(வயது 41). இவர் மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பள்ளக்காடு அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், வனிதா அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்