தொழிலாளி வெட்டிக்கொலை

வத்திராயிருப்பில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-11-15 19:53 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 
தொழிலாளி 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியன் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 29). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. 
இவர் நேற்று வத்திராயிருப்பில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் தனியார் பார் முன்பு வெட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு போலீசார் வந்தனர். 
வெட்டுக்காயம் 
அப்போது சுபாஷ் முகத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாசை எதற்காக கொலை செய்தார்கள்? கொலை செய்த மர்மநபர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வ.புதுப்பட்டி பகுதியில் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்