கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2021-11-17 05:35 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டனர். 14 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 269 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 116 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 351 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்