அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
உலக நன்மை வேண்டி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில், பேச்சியம்மன், வனப்பேச்சி அம்மன் கோவில் உள்ளது. உலக நன்மைக்காக பேச்சியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழகத்தில் மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும் இந்த விளக்கு பூஜை நடைபெற்றது என அரையர் வடபத்திர சாயி கூறினார்.