மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-20 13:07 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருடைய மகன் மகாலிங்கம் (வயது 40). இவர் கடந்த 18-ந் தேதி அன்று தூத்துக்குடி கோர்ட்டுக்கு எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த மரிய மைக்கேல் மகன் அருண் ஜெரால்டு (30), மறவன்மடம் திரவியபுரத்தை சேர்ந்த அர்ஜூனன் மகன் முருகன் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து மகாலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அருண் ஜெரால்டு, முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்