பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

விருதுநகரில் பேராசிரியர் வீட்டில் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-11-21 18:54 GMT
விருதுநகர், 
விருதுநகர் டி.கே.எஸ்.பி.நகரில் வசிப்பவர் கிருஷ்ணசாமி (வயது 42). பெங்களூருவில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா. கிருஷ்ணசாமி பணி நிமித்தமாக பெங்களூரு சென்று விட்ட நிலையில் இவரது மனைவி கீதா வீட்டை பூட்டி விட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று இருவரும் வீடு திரும்பியபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த தங்க மோதிரம், வெள்ளி விளக்கு மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தது. இதுபற்றி கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகரில் பேராசிரியர் வீட்டில் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். 

மேலும் செய்திகள்