போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2021-11-22 18:20 GMT
கரூர்
கரூர்
போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு மண்டல கரூர் கிளை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் ஈரோடு மண்டல நிர்வாகிகள் முருகையா, இளங்கோவன், சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்