விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-22 18:31 GMT
கரூர்
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள பஞ்சமாதேவியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). பெயிண்டரான இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்