வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் சுப்புராயலு மகன் விஜயராமராஜ் (வயது 24). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தாா். இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்புராயலு உள்ளிட்ட குடும்பத்தினர் பரப்பாடியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த விஜயராமராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.