பாலியல் தொந்தரவால் மனமுடைந்து 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பாலியல் தொந்தரவால் மனமுடைந்து 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-11-23 17:52 GMT
மயிலம்

மயிலம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபிரகாஷ் (வயது 22). இவர் மயிலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததோடு அவரை காதலிப்பதாக கூறி தொலைபேசி மூலம் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயப்பிரகாஷின் உறவினர்களிடம் கூறி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயபிரகாஷ் மீண்டும் சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயப்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி் வருகிறார்கள்.

மேலும் செய்திகள்