தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ரிஷிவந்தியம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-23 18:53 GMT
ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே பெரிய கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்து (வயது 23). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த  சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.  இந்த நிலையில் அதே ஊரில் உள்ள ஒரு மரத்தில் ஆனந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்