முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

பாளையங்கோட்டையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-23 19:33 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள அரசன்குளத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 65). இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் திருமண தகவல் நிலையம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருமண தகவல் நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்